December 23, 2023

முன்கணிப்பு: 2024-இல் யூரோ மற்றும் டாலரில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்1 

வழக்கமாக, கடந்த மற்றும் வரும் ஆண்டுகளின் தொடக்கத்தில் முன்னணி உலக நிதி நிறுவனங்களின் கரன்சி முன்கணிப்புகளை நாங்கள் வெளியிட்டு வருகிறோம். பல ஆண்டுகளாக இந்த நடைமுறையை பராமரித்து வருவதால், இது எதிர்காலத்தை உற்று நோக்குவது மட்டுமின்றி, நிபுணர்களின் கடந்தகால கணிப்புகளை பிரதிபலிக்கவும் அவற்றின் துல்லியத்தை மதிப்பீடு செய்யவும் உதவுகிறது.

 

2022: ஆரம்பம்

கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் உலகம் வாழத் தழுவியதைப் போலவே, போர் கிரகத்தின் வாழ்க்கையில் நுழைந்தது. 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீதான இரஷ்யாவின் ஆயுதப் படையெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்து இரஷ்ய எதிர்ப்புத் தடைகள் பொருளாதாரச் சிக்கல்களை அதிகப்படுத்தியது மேலும் இந்த பிராந்தியத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள பல நாடுகளில் கூட பணவீக்க வளர்ச்சியைத் தூண்டியது,.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மோதல் மண்டலத்திற்கு அருகாமையில் இருத்தல், இரஷ்ய இயற்கை ஆற்றல் வளங்களை அவர்கள் வலுவாகச் சார்ந்திருத்தல், அணுசக்தி அச்சுறுத்தல் மற்றும் மோதல்கள் தங்கள் பிராந்தியங்களுக்கு பரவும் அபாயங்கள் ஆகியவை யூரோமண்டலப் பொருளாதாரத்திற்கு கடுமையான அடியை ஏற்படுத்தியது. இத்தகைய சூழ்நிலைகளில், ஈரோப்பியன் சென்ட்ரல் பேங்க் (ஈசிபி) முழுமையான சரிவைத் தவிர்க்க மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியிருந்தது. அமெரிக்கா ஒரு குறிப்பிடத்தக்க சாதகமான நிலையில் தன்னைக் கண்டது, இது பணவீக்க அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் ஃபெடரல் ரிசர்வ் மார்ச்சு 16 அன்று வட்டி விகித உயர்வு சுழற்சியை தொடங்க அனுமதித்தது. இது டாலரை வலுப்படுத்த ஒரு ஊக்கியாக செயல்பட்டது. ஜூலை 14 அன்று, யூரோ/யுஎஸ்டி 20 ஆண்டுகளில் முதல் முறையாக 1.0000 என்ற சமநிலைக் கோட்டிற்குக் கீழே சரிந்தது, செப்டம்பர் 28 அன்று 0.9535 என்ற குறைந்தபட்ச அளவை எட்டியது. ஜூலை மத்தியில், ஈரோப்பியன் சென்ட்ரல் பேங்க்கும் யூரோ விகிதத்தைப் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, யூரோ/யுஎஸ்டி 1.0700 என்ற அளவில் புதிய ஆண்டான 2023-இல் நுழைந்தது.

 

2023: யாருடைய முன்கணிப்புகள் மிகவும் துல்லியமாக நிரூபிக்கப்பட்டன

கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறையத் தொடங்கியது, மே 5 அன்று, கோவிட்-19 இனி உலகளாவிய அவசரநிலை அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. படிப்படியாக, பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கின. உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகள் நீடித்த மோதலாக மாறியது. பணவீக்கத்திற்கு எதிரான போராட்டம் மெதுவாக வெற்றிக்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியது, மேலும் பொருளாதாரம் உயரும் வட்டி விகிதங்கள் மற்றும் எரிபொருளின் விலையுயர்வுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடிந்தது. ஒரு உலகளாவிய பேரழிவு தவிர்க்கப்பட்டது, குறிப்பாக அமெரிக்கப் பொருளாதாரம், சாத்தியமாக யூரோமண்டலப் பொருளாதார வளர்ச்சியில் ஒரு படிப்படியான மந்தநிலை நிலையான நீண்டகாலத்திற்கு இருக்கும் என்று கணிக்கும் குரல்கள் சத்தமாகக் கேட்டன.

2022-இல், யூரோ/யுஎஸ்டி-க்கான ஏற்ற இறக்கங்களின் அதிகபட்ச வரம்பு 1,700 புள்ளிகளைத் தாண்டியது, ஆனால் 2023-இல், இந்த எண்ணிக்கை 828 புள்ளிகளாக பாதியாகக் குறைக்கப்பட்டது. இந்த ஜோடி ஜூலை 18 அன்று உச்சத்தை அடைந்தது, 1.1275 ஆக உயர்ந்தது. இது அக்டோபர் 3 அன்று 1.0447-இல் அதன் அடிநிலையைக் கண்டறிந்தது மேலும் டிசம்பரின் முடிவில் 1.0900-1.1000 வரம்பில் உள்ளது (இந்த மதிப்பாய்வை எழுதும் வரை), ஜனவரி மதிப்புகளிலிருந்து வெகு தொலைவில் இல்லை.

எனவே, 2023-க்கு நிபுணர்கள் என்ன முன்கணிப்புகளை வழங்கினர்? இண்டர்நேஷனல் நெடர்லேண்டன் குரோப்பின் முன்கணிப்பு உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. 2022-இன் அனைத்து அழுத்தக் காரணிகளும் 2023 வரை நீடிக்கும் என்று ஐஎன்ஜி நம்பிக்கை கொண்டிருந்தது. எரிபொருளின் விலை உயர்வுகள் ஐரோப்பியப் பொருளாதாரத்தின் மீது பெரும் சுமையைத் தொடரும். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் அதன் பிரின்டிங் பிரஸ்ஸை ஈசிபிக்கு முன்பு நிறுத்தினால் கூடுதல் அழுத்தம் வரும். இந்த முக்கிய டச்சு வங்கிக் குழுவின் பகுப்பாய்வாளர்களின் கூற்றுப்படி, 2023, 1வது காலாண்டில் ஒரு டாலருக்கு 0.9500 யூரோ வீதம் எதிர்பார்க்கப்பட்டது, அது பின்னர் உயரக்கூடும், 4வது காலாண்டில் 1.0000 என்ற சமநிலையை அடையும்.

தி ஏஜென்சி ஃபார் எகனாமிக் ஃபோர்காஸ்ட்டிங் வல்லுநர்கள் 1வது காலாண்டில் யூரோ/யுஎஸ்டி இயக்கவியல் குறித்து துல்லியமாக இருந்தனர்: அவர்கள் 1.1160 ஆக உயரும் என்று கணித்திருந்தனர் (உண்மையில், இது 1.1033 ஆக உயர்ந்தது). இருப்பினும், இந்த ஜோடி ஒரு நிலையான சரிவைச் சந்திக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர், 3வது காலாண்டின் முடிவில் 1.0050-ஐ அடைந்து, ஆண்டை 0.9790-இல் முடிக்கும். இங்கே, அவர்கள் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டனர்.

ஆனால் கரடிகள் மட்டும் தவறு செய்யவில்லை; யூரோ/டாலர் ஜோடியில் உள்ள காளைகளும் தவறிழைத்தன. எடுத்துக்காட்டாக, பிரெஞ்சு நிதி நிறுவனமான சொசைட்டி ஜெனரல் பலவீனமான டாலர் மற்றும் ஜோடியின் உயர்வுக்கு வாக்களித்தது. இருப்பினும், 1வது காலாண்டின் முடிவில் 1.1500க்கு மேல் ஏறும் என்ற அவர்களின் கணிப்பு மிகவும் தீவிரமானது. டாய்ஷ் பேங்க்கில் உள்ள உத்தியாளர்கள் 1.0800-1.1500 வரம்பில் ஏற்ற இறக்கங்களை அனுமதித்தனர். இருப்பினும், அவர்களின் பார்வையில், 2023-இன் இரண்டாம் பாதியில் ஃபெட் அதன் பணவியல் கொள்கையை எளிதாக்கத் தொடங்கினால் மட்டுமே இந்த ஜோடியின் உச்ச வரம்பு உயர்வு சாத்தியமாகும். (இப்போது எந்த தளர்த்தலும் ஏற்படவில்லை என்பதை நாம் அறிவோம், ஆனால் ஜூலை முதல் விகிதம் 5.50%-இல் இருந்து முடக்கப்பட்டது.).

மிகத் துல்லியமான கணிப்புகள் பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஜெர்மன் காமர்ஸ்பேங்க் ஆகியவற்றில் இருந்து வந்தன. பேங்க் ஆஃப் அமெரிக்காவின் அடிப்படை சூழ்நிலைப்படி, 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க டாலர் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, பின்னர் படிப்படியாக வலுவிழக்கத் தொடங்கும், இது ஃபெட்டின் இடைநிறுத்தத்திற்குப் பிறகு யூரோ/யுஎஸ்டி ஜோடி 1.1000 ஆக உயர வழிவகுத்தது. காமர்ஸ்பேங்க் இந்த சூழ்நிலையை ஆதரித்தது, "ஃபெட்-இன் வட்டி விகிதத்தில் எதிர்பார்க்கப்படும் மாற்றத்தைக் கருத்தில்கொண்டு, ஈசிபி வட்டி விகிதங்களைக் குறைப்பதைத் தவிர்ப்பதாகக் கருதி [...], 2023க்கான யூரோ/யுஎஸ்டி-க்கான எங்கள் இலக்கு விலை 1.1000 ஆகும்" என்பது இந்த வங்கிக் குழுமத்தின் உத்திசார் நிபுணர்களின் தீர்ப்பாகும்.

 

2024: புத்தாண்டில் என்ன எதிர்பார்க்கலாம்

வரவிருக்கும் 2024ஆம் ஆண்டில் யூரோ மற்றும் டாலருக்கு என்ன காத்திருக்கிறது? பல "ஆச்சரியங்கள்" வாழ்க்கை சமீபத்தில் வழங்கியது மற்றும் தீர்க்கப்படாத பல சிக்கல்களால் எதிர்காலத்தில் முன்கணிப்புகள் கணிசமாக வேறுபடுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். புவிசார் அரசியல் நிலைமை, ஃபெடரல் ரிசர்வ் (ஃபெடரல்) மற்றும் ஈரோப்பின் சென்ட்ரல் பேங்க்  (ஈசிபி) ஆகியவற்றின் பணவியல் கொள்கைகளின் திசை மற்றும் வேகம், பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் சந்தைகளின் நிலை, பணவீக்கம் மற்றும் எரிபொருட்களின் விலைகள் எந்த அளவிற்கு கட்டுப்படுத்த முடியும், நவம்பர் மாதம் அமெரிக்காவின் ஜனாதிபதியாக யார் தேர்ந்தெடுக்கப்படுவார், உக்ரைனில் ரஷ்யாவின் போரின் விளைவுகள் மற்றும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் மற்றும் அமெரிக்க-சீனா போட்டியின் அதிகார சமநிலை என்பது பற்றிய கேள்விகள் உள்ளன. இந்த மற்றும் பிற கேள்விகளுக்கான பதில்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. நிச்சயமற்ற பல காரணிகளுடன், நிபுணர்கள் ஒருமித்த கருத்தை எட்டவில்லை.

ஃபெட் தலைவர் ஜெரோம் பவலின் சமீபத்திய டோவிஷ் கருத்துக்கள் மற்றும் ஈசிபி தலைவர் கிறிஸ்டின் லகார்ட்டின் மிதமான ஹாக்கிஷ் அறிக்கைகள், 2024ஆம் ஆண்டில் பணவியல் கொள்கையை தளர்த்துவதற்கும் வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கும் ஃபெட் வழிவகுக்கும் என்று சந்தைகளை நம்ப வைத்துள்ளது.

சந்தை எதிர் சமிக்ஞையைப் பெறவில்லை என்றால், அமெரிக்க டாலர் அழுத்தத்தில் இருக்கும். டாலர் குறியீடு (டிஎக்ஸ்ஒய்) தற்போதைய 102.50 இலிருந்து 100க்கு கீழே, 97 புள்ளிகள் வரை குறையக்கூடும் என்று சொசைட்டி ஜெனரல் நம்புகிறது. பகுப்பாய்வாளர்களின் ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பு, வரும் ஆண்டில் அமெரிக்க டாலர் பலவீனமடையும் என்று சுட்டிக்காட்டுகிறது. இன்வெஸ்டிங்.காம்-இன் ஒரு மதிப்பாய்வு பல்வேறு புவிசார் அரசியல் மற்றும் மேக்ரோ பொருளாதார நிலைமைகளுக்கு உட்பட்டு யூரோ/யுஎஸ்டி 1.1500-ஐ எட்டக்கூடும் என்று கூறுகிறது.

யுபிஎஸ் வெல்த் மேனேஜ்மென்ட் மூலம் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அடிப்படைச் சூழ்நிலையின்படி,  அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை, பணவீக்கம் வீழ்ச்சி, மற்றும் குறைந்த வட்டி விகிதங்களின் எதிர்பார்ப்பு ஆகியவை பங்குகள் மற்றும் பத்திரங்களை ஆதரிக்க வேண்டும். யூரோ/யுஎஸ்டி ஜோடியைப் பொறுத்தவரை, யுபிஎஸ் அதை 1.1200 அளவில் பார்க்கிறது. ஜெர்மன் காமர்ஸ்பேங்கின் கணிப்புகள் 1.1200 உச்சத்தை உள்ளடக்கியது. டாலருக்கு எதிராக யூரோ தற்காலிகமாக வலுவடையும் என்று பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். 2024 ஜூன் மாதத்திற்குள் விகிதம் 1.1200 ஆக உயரும், பின்னர் 2025 மார்ச்சுக்குள் 1.0800 ஆக குறையும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

2024-இன் இரண்டாம் பாதியில், யூரோ/யுஎஸ்டி விகிதம் இன்னும் 1.1800 நோக்கி உயரும் என்று ஐஎன்ஜி பொருளாதார வல்லுநர்கள் கணக்கிடுகின்றனர். இருப்பினும், இந்த முன்கணிப்பு ஃபெட் மற்றும் ஈசிபி கொள்கைகளின் சாத்தியமான பாதையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள், "விகித வேறுபாடு மட்டுமே யூரோ/யுஎஸ்டி போக்கை நிர்ணயிக்கும் காரணி அல்ல." யூரோமண்டலத்தில் குறைந்த வளர்ச்சி விகிதங்கள் மற்றும் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஒப்பந்தத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது தொடர்பான அரசியல் நிச்சயமற்ற தன்மை, யூரோ/யுஎஸ்டி இந்த ஆண்டு 1.0600க்கு அருகில் முடிவடையும், 2024-இல் அதன் உச்ச நிலைகள் 1.1800-ஐ விட 1.1500-க்கு நெருக்கமாக இருக்கும்.

ஃபிடிலிட்டி இன்டர்நேஷனல், ஜேபி மோர்கன் மற்றும் எச்எஸ்பிசி பொருளாதார வல்லுநர்கள், இசிபி மற்றும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து போன்ற பிற கட்டுப்பாட்டாளர்கள் ஃபெட்-க்கு முன்னதாக எளிதாக்குவதில் முன்னணியில் இருக்கக்கூடிய சூழ்நிலையை நிராகரிக்கவில்லை.

கோல்ட்மேன் சாக்ஸ் உத்திசார் நிபுணர்கள் 2024-இல் டாலரின் வாய்ப்புகள் மோசமடையக்கூடும் என்று நம்புகிறார்கள், வலுவான மற்றும் நிலையான அமெரிக்கப் பொருளாதாரம் கரன்சியின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும். டாலர் இன்னும் அதிக மதிப்புடையது என்று அவர்கள் எழுதுகிறார்கள், மேலும் முதலீட்டாளர்கள் அதை நோக்கி சாய்கிறார்கள், இது "நீண்டகாலத்திற்கு வலுவாக இருக்கும்" மற்றும் எந்த சரிவும் முக்கியமற்றதாக இருக்கும். 2024-இல் முழு 150 அடிப்படைப் புள்ளிகள் விகிதக் குறைப்பை ஏற்படுத்த முடியாத அளவுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் வலுவாக உள்ளது.

டான்ஸ்கே பேங்க், வெஸ்ட்பேக், எச்எஸ்பிசி ஆகியவை 2024-ஆம் ஆண்டின் இறுதியில், யூரோ மற்றும் பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக டாலர் வலுவடையும் என்று நம்புகின்றன. ஏபிஎன் ஆம்ரோவின் அடுத்த ஆண்டு இறுதிக்கான முன்கணிப்பு 1.0500 விகிதத்தைப் பரிந்துரைக்கிறது, மேலும் தி ஏஜென்சி ஃபார் எகனாமிக் ஃபோர்காஸ்டிங் 1.0230 என்று கணித்துள்ளது. 

***

பண்டைய சீன இராணுவக் கட்டுரையான "தி தர்ட்டிசிக்ஸ் ஸ்ட்ரேடஜெம்ஸ்" இவ்வாறு கூறுகிறது, "எல்லாவற்றையும் முன்கூட்டியே பார்க்க முயற்சிப்பவர் விழிப்புணர்வை இழக்கிறார்." உண்மையில், எல்லாவற்றையும் முன்கணிப்பது சாத்தியமில்லை. ஆனால் ஒரு விஷயத்தை உறுதியாகக் கூறலாம்: வரவிருக்கும் பன்னிரண்டு மாதங்கள், முந்தைய மாதங்களைப் போலவே, எதிர்பாராத ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருக்கும். எனவே, விழிப்புடன் இருங்கள், அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும்.

வரவிருக்கும் புத்தாண்டு 2024 வாழ்த்துக்கள்! இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.

 

நோர்ட்எஃப்எக்ஸ் பகுப்பாய்வுக் குழு

 

அறிவிப்பு: இந்தத் தகவல்கள் நிதிச் சந்தைகளில் செயல்படுத்துதவற்கான முதலீட்டு பரிந்துரைகளோ அல்லது வழிகாட்டுதல்களோ அல்ல மேலும் வை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. நிதிச் சந்தைகளில் வர்த்தகம் செய்வது ஆபத்தானது மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட நிதியின் முழுமையான இழப்பை ஏற்படுத்தும்.


« Market Analysis and News

பயிற்சி பெறவும்
சந்தையில் புதியதா? \"தொடங்குதல்\" பகுதியைப் பயன்படுத்தவும். இப்போதே வர்த்தகத்தைத் தொடங்குங்கள்
பயிற்சியைத் தொடங்குங்கள்